அருகம்புல்லின் பயன்கள் :
அருகம்புல்லுக்கு பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு
விடைகொடுக்கலாம்.
நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நன்றாக
அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும்
முன் சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும்.
வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம்.
உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு உதவியாக உள்ளது. மேலும்
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், இரத்தச் சோகை, இரத்த
அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.
வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வரலாம்.
நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும்
பிரச்சனைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. நீங்கள் பொதுவாக
அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப்
பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.
அருகம்புல் சாறு பருகினால் சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சல்,
முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக
குறையும். அருகம்புல்லில் வைட்டமின்-ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து
இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப்
போக்கி அன்றாட வாழ்வில் உண்டாகும் மன உளைச்சல் மற்றும் மன இறுக்கத்தை
நீக்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம்
செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment