Showing posts with label சகல நோய்களையும் போக்கும் சாத்துக்குடி ஜூஸ்!. Show all posts
Showing posts with label சகல நோய்களையும் போக்கும் சாத்துக்குடி ஜூஸ்!. Show all posts

Friday, 27 October 2017

சகல நோய்களையும் போக்கும் சாத்துக்குடி ஜூஸ்!

சாத்துக்குடி பழம்தானேனு சாதாரணமா நினைக்காதீங்க !
சகல நோய்களையும் போக்கும் சாத்துக்குடி ஜூஸ்! 




 
சாத்துக்குடி பழமா? என சாதாரணமாக கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துக்குடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவியாக திகழ்கிறது.

நோய் என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று.

சாத்துக்குடி ஜூஸ் :

உயிரினங்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களையும் சாத்துக்குடி பழத்தால் வென்றுவிடலாம். எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிற பழம்தான் சாத்துக்குடி. சாத்துக்குடி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சாத்துக்குடி ஜூஸ்தான்.

வெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சியை தரும் பழமாக சாத்துக்குடி முதலிடம் பிடிக்கிறது. சாத்துக்குடி பசுமையுடன் காட்சியளித்து அருந்துகிறவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் செழுமையை தருகிறது. எல்லா காலக்கட்டங்களிலும் எளிதாக கிடைக்ககூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் தான் சாத்துக்குடி.


சாத்துக்குடி பழத்தின் சிறப்புகள் :

குறைவான எரிசக்தி கொண்டதால் உடல் எடை கூடுவதை தடுப்பதுடன், உடலுக்கு பலத்தை தருகிறது.

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது.

ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து.

எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.

சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும்.

பசியில்லாமல் அவதியுறும் நபர்கள், சாத்துக்குடி சாற்றை குடித்தால் ஜீரண சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

சாத்துக்குடியில், நார்சத்து நிறைந்துள்ளது.

சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துக்குடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.

இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்தது, உடல் சக்தியை அதிகரிப்பதுமின்றி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது சாத்துக்குடி ஜூஸ்.

இதில், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, புரதம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் நச்சுக்களை அழித்தும், உடல் பாகங்களின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.

மேலும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைய பயன்படுகிறது, குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்புகளுக்கு தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும், வலுவற்ற எலும்பிற்கு வலுசேர்க்கவும், சாத்துக்குடி ஜூஸ் பயன்படுகிறது.