Showing posts with label நுரையீரல் காக்க.... Show all posts
Showing posts with label நுரையீரல் காக்க.... Show all posts

Tuesday, 30 January 2018

இதயம், நுரையீரல் காக்க...

இதயம், நுரையீரல் காக்க...

 

குரல்

  • நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகம் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

மூக்கிலிருந்து ரத்தம் வருதல்

  • இரண்டு அவுன்ஸ் ஆடு தீண்டா பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.

நாக்கு

நாக்கில் ஏற்படும் எல்லாவிதமான குறைப்பாடுகளையும் துளசி தீர்த்துவிடும். நாக்கில் சுவையின்மை இருந்தால் அதையும் போக்கவல்லது.

நாக்கு புண்ணாக இருந்தால், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி இலேசாக கொப்பளித்து விழுங்கவும்.

பல்வலி

  • பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். 
  • இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.

திக்கு வாய்

  • வசம்பை பொடித்து வைத்துக் கொண்டு இத்துடன் தேனைக் கலந்து கொடுத்து வந்தால் திக்குவாய் சரியாகும்.

தொண்டைப்புண்

  • இதற்கு சுடுநீரில் உப்பு போட்டு 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கொப்பளிக்க வேண்டும்.
  • ஒரு நாளைக்கு 2 தடவை 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தொண்டைப்புண் ஆறும்.உப்பு, தயிர், வெங்காயக் கலவை தொண்டைப் புண்ணை ஆற்றும்.
  • தொண்டையில் ஏற்படும் நோய்களை தேன் குணப்படுத்தும். தேன் கிருமிநாசினியாக வேலை செய்யும்.
  • தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும் சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் கடவ வேண்டும்.

நுரையீரல்

  • நுரையீரல் நோய்களுக்கு வெற்றிலைச் சாறு நல்லது. நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இதயம்

  • தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது.
  • காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதில் பெருமளவு கரோட்டின் உள்ளது.
  • பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இதயம் மற்றும் மூளை நரம்புகள் வலிமை பெறும் இரத்தம் ஊறும்.

தூக்கம்

  • இரவு உணவை முடித்தபின் 1 தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் 1 டம்ளர் பால் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
  • தினமும் மாலையில் 6 மணிக்குள் வேலையை முடித்து அரை மணிநேரம் நடைப் பயிற்சி செய்து, 7மணிக்குள் சாப்பிட்டு முடித்து, இரவில் குளித்து விட்டுப்படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

தழும்புகள்

  • முட்டையின் வெள்ளைக்கருவை தழும்புகள் மீது தடவி வந்தால் தழும்புகள் மறையும்.
  • எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ வேண்டும்.